Thursday 13 October 2016

ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்…



ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்



சர்வதேச அளவில் தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளை, தடைகளை, விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் புர்கா, பர்தா அணியத்தடை, மேற்கத்திய நாடுகளின் சிலதில் தாடி வைப்பதற்குத் தடை, இன்னும் சில நாடுகளில் பள்ளிவாசல்கள் கட்ட தடை, இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியப் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நடத்தத் தடை என பல்வேறு நெருக்கடிகள்.

இன்றல்ல, நேற்றல்ல இப்பிரபஞ்சத்தில் ஓரிறைக் கொள்கையை எடுத்தியம்ப ஆரம்பித்த காலம் முதற்கொண்டே போராட்ட்டக் களங்களை இறைத்தூதர்களும், அவர்களைக் கொண்டு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகங்களும் சந்தித்தே வந்துள்ளனர்.

இறுதியாக, முஸ்லிம் சமூகமே வல்லோனின் வியத்தகு சான்றுகள் மற்றும் வல்லமை, ஆகிய உதவிகளின் துணை கொண்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்திய தேசத்திலும் முஸ்லிம் சமூகம் தொடர்படியாக பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றது.

சமீபகாலமாக, இந்த தேசத்தின் அரசு, சட்டம், நீதி சார்ந்த அத்துனை முனைகளில் இருந்தும் இஸ்லாமியச் சமூகம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.

உதாரணமாக, மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத்தடைச் சட்டம், மாட்டிறைச்சி உண்ண தடை, ஒட்டகம் குர்பானி கொடுக்க தடை, பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், கட்டாய யோகா என ஒரு நீண்ட பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதன் தொடர்ச்சியாக, “உத்தரகண்ட் மாநிலத்தைச் சார்ந்த சாயிரா பானு, மற்றும் ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களைச் சார்ந்த 2 பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்த போது, முஸ்லிம் அமைப்புகள்முஸ்லிம் தனி நபர் சட்டம், புனித குர்ஆன் மற்றும் ஷரீஅத் சட்டத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டது. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இவற்றை மாற்ற முடியாது. நீதிமன்றங்கள் இதில் தலையிட அதிகாரமில்லைஎன பதில் அளித்திருந்தன.

இந்நிலையில், மத்தியில் ஆளும் ஃபாஸிச பா.. அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில்தலாக் நடைமுறையை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாக திகழும். இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாதுஎனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தலாக் நடைமுறையை ஒழித்துக் கட்டுவது மற்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சட்டக்கமிஷன் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.

                                     ( நன்றி: தமிழ் தி இந்து தின நாளிதழ் )

மத்திய ஃபாஸிச பா.. வின் அறிக்கை பல்வேறு குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் சுமந்து நிற்கின்றது.

1. முஸ்லிம்களின் வழிபாடு என்பது வேறு.
2. முஸ்லிம்களின் வாழ்க்கை நெறி என்பது வேறு.
3.  உலகளாவிய ஒரு மார்க்கத்தின் சட்டங்கள் குறித்து அந்த மார்க்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மக்களிடம் கருத்தும், அபிப்பிராயமும் கேட்க முனைந்திருப்பது.
4. மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை.
5. பாலினபாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தைப் பற்றிய தெளிவான பார்வையோ, இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படை புரிதலோ இல்லாமல் முழுக்க, முழுக்க சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் குரல்வளையை நெறிப்பதற்காகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

வாருங்கள்! ஃபாஸிச பா.. வின் (அறிக்கையின்) முகத்திரையை கிழித்து, மக்கள் மன்றத்தின் முன்னர் குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் தெளிவு படுத்துவோம்!

1. ஃபாஸிச பா.ஜ.க அரசு தாக்கல் செய்திருக்கிற அறிக்கையில் ”அரசியலமைப்புச் சட்டமே பிரதானம் என்றும் மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை என்றும் முரண்பாடான தகவல்களை தந்திருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டம் கூறுவதென்ன?....

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்  The seven fundamental rights recognized by the Indian constitution are: 1. Right to equality   2. Right to freedom  3. Right against exploitation   4.Right to freedom of religion 5. Cultural and Educational rights  6. Right to constitutional remedies  7. Right to independence, privacy and security”   சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சமய உரிமை, கல்வி, கலாச்சார உரிமை, சமநீதி, தனிமனித பாதுகாப்பு மற்றும் சுதந்திர உரிமை, அடக்குமுறைக்கு எதிராக அணுகும் முறை. ஆகிய ஏழு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Right to equality is an important right provided for in Articles 14, 15, 16, 17 and 18 of the constitution. It is the principal foundation of all other rights and liberties, and guarantees.

The Constitution of India contains the right to freedom, given in articles 19, 20, 21, 21A and 22, with the view of guaranteeing individual rights that were considered vital by the framers of the constitution.

Right to freedom of religion, covered in Articles 25, 26, 27 and 28, provides religious freedom to all citizens of India. The objective of this right is to sustain the principle of secularism in India. According to the Constitution, all religions are equal before the State and no religion shall be given preference over the other. Citizens are free to preach, practice and propagate any religion of their choice.

As India is a country of many languages, religions, and cultures, the Constitution provides special measures, in Articles 29 and 30, to protect the rights of the minorities. Any community that has a language and a script of its own has the right to conserve and develop it. No citizen can be discriminated against for admission in State or State aided institutions.

Right to constitutional remedies [Article 32 to 35] empowers the citizens to move a court of law in case of any denial of the fundamental rights. For instance, in case of imprisonment, the citizen can ask the court to see if it is according to the provisions of the law of the country. If the court finds that it is not, the person will have to be freed. This procedure of asking the courts to preserve or safeguard the citizens' fundamental rights can be done in various ways. The courts can issue various kinds of writs. These writs are habeas corpus, mandamus, prohibition, quo warranto and certiorari. When a national or state emergency is declared, this right is suspended by the central government.

இது தவிர்த்து அரசியல் சாசனத்தின் பல பிரிவுகள் சமய ரீதியிலான பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகும் கூறுகின்றன. மேற்கூறிய ஆங்கில மூலத்தில் சமத்துவ உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 14 முதல் 18 வரையிலும், சுதந்திர உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 19 முதல் 22 வரையிலும், சமய உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 25 முதல் 28 வரையிலும், கல்வி, கலாச்சார உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 29 மற்றும் 30 –ம், சமநீதி குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 32 முதல் 35 வரையிலும் இவைகள் விளக்கப் பட்டிருக்கின்றன.

இன்னும், சில உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் சாசனம் மற்றும் அமைப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950: இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கம் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரிவு-51  : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950: இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.

பிரிவு 29:1 : இந்திய அரசியல் சாசனம் பகுதி 3, அடிப்படை உரிமைகள், 1950: இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் அவர்களின் மொழி, பண்பாடு, போன்றவை சிதையாமல் பாதுகாத்து வாழ உரிமை உள்ளவர்கள்.

பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது.

பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள்.

இந்திய அரசியல் சாசனம் மற்றும் அரசியலைப்புச் சட்டங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளின் படி முஸ்லிம் சமூகம் தலாக், மற்றும் திருமணம், சொத்து சம்பந்தமாக இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருவது எப்படி தவறான, பிழையான ஒன்றாகும்.

2. பாலின பாகுபாட்டை இஸ்லாம் ஊக்குவிக்கின்றதா?....

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ, அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம். மேலும், (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலி வழங்குவோம்.”
                                                                                                                               (அல்குர்ஆன்; 16:97)

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()


 கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள்.

 மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
                                                                                                                                  (அல்குர்ஆன்; 9:72)

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

            ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.”
                                                                                                                                    (அல்குர்ஆன்; 33:35)

إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ ()

ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .”
(அல்குர்ஆன்; 57:18)

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ()

“ ( நபியே! ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”                               ( அல்குர்ஆன்: 24:30 )

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்!                           ( அல்குர்ஆன்: 24:31 )


والسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.”                                     (அல்குர்ஆன்:5:38)

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ

திருமணமாகா விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் தண்டனையாக நூறு கசையடி அடியுங்கள்”.                    ( அல்குர்ஆன்: 24: 2 )

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ()

மேலும், ( நபியே! ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்! தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும்! தங்களுடைய அழகை வெளியே காட்டாதிருக்கட்டும்! அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்!”

தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள், மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழ்கிற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்களின் முன்னிலையில் அன்றி வேறு எவருடைய முன்னிலையிலும் தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம்.

தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.”                                           ( அல்குர்ஆன்: 24:31 )

கற்பொழுக்கமுள்ள  விஷயங்கள் ஆகட்டும்,  ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

மேலும், சமயக்கடமைகள் ஆகட்டும்,   சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

குற்றவியல் தண்டனைகளில் ஆண், பெண் இருவருக்கும் சமமான தண்டனை, ஆணுக்கு தலாக் என்றால் பெண்ணுக்கு ஃகுலா என்றும் சமமாகவே உரிமைகள் வழங்கி பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை.

 மேலும், அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறு உலக சுவனமும் ஆண்,  பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டும் கொடுக்கப்படுவதில்லை.

மாறாக,  நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால், ஆடை மற்றும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் ஆண்களிடம் விதிக்காத ஒரு சில கட்டுப்பாடுகளை பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கின்றது.

எனவே, ஆடை மற்றும் அழகை வெளிப்படுத்துகிற விவகாரத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.

ஆகவே, இஸ்லாமிய வழிகாட்டுதல்கள், சட்டங்கள் பாலின பாகுபாட்டை உண்டு பண்ணுகின்றது என்கிற குற்றச்சாட்டு மிகவும் தவறானதும் பிழையானதும், இட்டுக்கட்டப்பட்டதும் ஆகும்.

3. முஸ்லிம்களின் வழிபாடும், வாழ்க்கை நெறியும் வெவ்வேறானதா?..

இஸ்லாம் என்பது  தத்துவங்களின் தொகுப்புகள் என்றோ, அல்லது  சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், வழிபாடுகளையும், கடைப்பிடிக்கச் சொல்லும்  சமய அமைப்பு என்றோ கூறிட இயலாது.

மாறாக,  ஒரு முஸ்லிமுடைய இருபத்து நான்கு மணிநேர  வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு. 

நாளொன்றுக்கு ஐந்து வேளைகள் இறைவனைத் தொழுதுவிடுவதனாலோ, வசதி வாய்ப்புகள் வருகிற போது ஹஜ் செய்வதாலோ, வருடத்திற்கு முப்பது நாள் பட்டினி கிடந்து நோன்பு நோற்று விடுவதோலோ மட்டும் ஒருவர் உண்மை முஸ்லிமாகிவிட முடியாது.

பிறப்பு முதல் இறப்புவரை, காலை எழுந்தது முதல் இரவில் உறங்கும்வரை மனிதனின் எல்லாப் பருவங்களிலும், அவன் எவைகளோடு எல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றானோ அத்துனை துறைகளிலும், தனிமனித, கூட்டுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள், பொதுவாழ்க்கை, அரசியல், அதிகாரம். வியாபாரம், கொடுக்கல், வாங்கல் என வாழ்க்கையில் அங்குலம் அங்குலமாக அவன் பின்பற்றி ஒழுக வேண்டிய நடைமுறைகள், குணநலன்கள் அடங்கிய வாழ்க்கை நெறியே இஸ்லாம்.

அல்குர்ஆன் ஒற்றை வசனத்தில் இப்படிக் கூறும்:

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ()

“நிச்சயமாக! என்னுடைய தொழுகையும், என்னுடைய இதர வணக்கமும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அனைத்துலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்”.                           ( அல்குர்ஆன்: 6: 162 )

உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடலாம்.

أخبرنا قبيصة أخبرنا سفيان عن أبي حمزة عن الحسن عن أبي سعيد 
عن النبي صلى الله عليه
 وسلم قال
 التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நேர்மையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் ஆகியோருடன் இருப்பார்.”   ( நூல்: திர்மிதீ )

வியாபாரம் என்பது உலகக்காரியங்களோடு தொடர்புடைய ஒன்று அதில் ஒரு முஸ்லிம் நேர்மையோடும், நாணயத்தோடும் நடந்து கொள்வான் எனில் அவன் மறுமையில் சுவனத்தில் இருப்பான் என்பதோடல்லாமல், மனிதர்களில் புனிதர்களான நபிமார்களோடும், அதற்கடுத்த, அதற்கடுத்த உயர் நிலை முஸ்லிம்களோடு தோழமையோடு இருப்பான் என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்னுமொரு உதாரணத்தை சுட்டிக்காட்டலாம்.

قال رسول اللَّه صلى الله عليه وسلم
 "ثلاثة يرزقون مرافقة الأنبياء: رجل يدفع إليه قاتل وليّه ليقتله فعفى عنه، ورجل عنده أمانة لو يشاء لخانها فيردها إلى من ائتمنه عليها، ورجل كظم غيظه عن أخيه ابتغاء وجه اللَّه"
- المستدرك، ج‏9، ص‏12، حديث 7.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நற்பண்புகளைக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் சுவனத்தில் நபிமார்களுடன் உறவாடிடும் நற்பேற்றை அடைந்து கொள்வார்கள்.

“1. உயிருக்கு உயிர் பழி வாங்கும் உரிமை இருந்தும் சம்பந்தப்பட்ட மனிதரை மன்னித்து விடுபவர்.

2. மோசடி செய்வதற்கு ஆற்றல், அதிகாரம் இருந்தும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை உரிய முறையில் நிறைவேற்றுபவர்.

3. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தன் சக முஸ்லிம் சகோதரன் ஒருவன் செய்த ரோஷமூட்டும் செயலால் தான் பாதிக்கப்பட்டும் தன் ரோஷத்தை விட்டு விட்டவர்.

                       ( நூல்: முஸ்தத்ரக், பாகம்:9, பக்கம்:12, ஹதீஸ் எண்:7 )

மனிதனின் உணர்வுகளோடும், உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கின்ற பண்புகளை சரி செய்து கொள்கின்ற முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்கும் சன்மானத்தை மாநபி {ஸல்} அவர்கள் இங்கே கூறுகின்றார்கள்.

எப்படி, வணக்க வழிபாடுகளுக்கு சுவர்க்கம் கிடைக்குமோ, அது போன்று ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றிருக்கும் குண நலன்களுக்கும், பண்பாடுகளுக்கும் சுவர்க்கம் பரிசாக கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, முஸ்லிம்களுக்கு வழிபாடு என்பது வேறு, வாழ்க்கை நெறி என்பது வேறு என்று பிளவு படுத்த வேண்டாம்.

வாழ்க்கையே வழிபாடாக, வழிபாடே வாழ்க்கையாக ஆக்கிக் கொள்பவர்களே முஸ்லிம்கள் என்பதை ஃபாஸிச வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

4. ஷரீஆவின் சட்டங்களை, அல்லாஹ்வின் வசனங்களை மாற்றம் செய்யவோ, சீர்திருத்தம் செய்யவோ, அது குறித்து அபிப்பிராயம் பேசவோ எவருக்கும் அதிகாரமில்லை எனும் போது உலகளாவிய ஒரு மார்க்கத்தின் சட்டங்கள் குறித்து அந்த மார்க்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மக்களிடம் கருத்தும், அபிப்பிராயமும் கேட்க முனைந்திருப்பது மாபெரும் பிழையாகும்.

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ () لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ () ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ ()

இந்தக் குர்ஆன் அனைத்துலகத்தாரின் அதிபதியான இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், (நாம் சொல்லாத) ஏதேனும் கற்பனையான செய்திகளில் சிலவற்றை நாம் சொன்னதாக நம்மீது நபியாகிய அவர் இட்டுக் கட்டியிருந்தால்அவருடைய வலக்கரத்தை நாம் பிடித்து, பிறகு அவரிலிருந்து கழுத்து நரம்பை நாம் துண்டித்து விடுவோம்”.             ( அல்குர்ஆன்: 69: 43 – 46 )

இஸ்லாமிய ஷரீஆவின் நிர்மாணத்தில் இறைவனுக்கு அடுத்து இறைத்தூதரே இடம் பெறுவார். எனினும், அல்லாஹ்வின் வரம்புகளில், எல்லைகளில் அந்த இறைத் தூதருக்கும் கூட சீர்திருத்தம் செய்யவோ, மாற்றியமைக்கவோ, அபிப்பிராயம் கூறிடவோ அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதையும், அதையும் மீறி இறைத் தூதர் அந்த அதிகாரத்தை கையில் எடுத்தால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நடவடிக்கை எப்படி அமைந்திருக்கும் என்பதையே மேற்கூறிய இறைவசனம் சுட்டிக்காட்டுகின்றது.


أن أهل تلك القرية لما سمعوا نزول هذه الآية استحيوا وجاءوا إلى رسول اللّه صلّى اللّه عليه وسلم بحمل من الذهب وقالوا : يا رسول اللّه نشتري بهذا الذهب أن تجعل الباء تاءا حتى تصير القراءة هكذا : فأتوا أن يضيفوهما.
أي أتوا لأن يضيفوهما ، أي كان إتيان أهل تلك القرية إليهما لأجل الضيافة ،
وقالوا : غرضنا منه أن يندفع عنا هذا اللؤم فامتنع رسول اللّه صلّى اللّه عليه وسلم وقال : إن تغيير هذه النقطة يوجب دخول الكذب في كلام اللّه ،

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பயணித்து உறவாடிய சம்பவம் குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் இறைவசனங்களை இறக்கியருளிக் கொண்டிருந்த தருணம் அது

حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا

பிறகு, இருவரும் ஓர் ஊர்வாசிகளிடம் வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம் இருவரும் தங்களுக்கு உணவளிக்குமாறு வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர்”. என்கிற 18 –ஆம் அத்தியாயத்தின் 77 –ஆவது இறைவசனம் இறக்கியருளப்பட்ட சில நாட்கள் கழித்து ஒரு கிராமத்தார்கள் மாநபி {ஸல்} அவர்களை சந்திக்க அனுமதி வேண்டி மஸ்ஜிதுன் நபவீயின் முன்பாக காத்திருந்தார்கள்.

அண்ணலாரும், அனுமதி கொடுத்து உள்ளே வரச் சொன்னார்கள். உள்ளே வந்த அந்த கிராம மக்கள்முஹம்மது அவர்களே! நாங்கள்பிறகு, இருவரும் ஓர் ஊர்வாசிகளிடம் வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம் இருவரும் தங்களுக்கு உணவளிக்குமாறு வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர்”. என்கிற செய்தி தங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாக கேள்விப்பட்டு வந்தோம்.

நாங்களும் அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் தாம். எங்களின் முன்னோர்கள் விபரமில்லாமல், அறிவில்லாமல் நடந்து கொண்டமைக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இனிமேல், ஒட்டு மொத்த மனித சமூகமும் எங்களை இனி எப்படிப் பார்க்கும் என்பதை நினைத்து நாங்கள் வெட்கப்படுகின்றோம். இதோ, நாங்கள் பொன்னை அள்ளிக் கொண்டு வந்திருக்கின்றோம். இதை வைத்துக் கொள்ளுங்கள்! எங்கள் மூதாதையர்கள் அளிக்காத விருந்துக்குப் பகரமாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள்! அதற்கு, பிரதி உபகாரமாக நீங்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்தால் போதும் فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا என்பதில் உள்ள பாவில் கீழே இருக்கிற ஒரு புள்ளியை எடுத்து விட்டு, மேலாக இரண்டு புள்ளியை வைத்து فأتوا أن يضيفوهما என்பதாக மாற்றி விடுங்கள்! விருந்தளிக்க மறுத்தார்கள் என்ற பொருள் மாறி விருந்து கொடுத்தார்கள் என்கிற பொருள் வந்து விடும்!” என்று கூறினார்கள்.

இது கேட்ட பெருமானார் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள்அல்லாஹ்வின் வேதத்தில், அவன் இறக்கியருளிய வசனத்தில் இப்படி ஒரு புள்ளியை மாற்றம் செய்வதென்பது அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்யை ஏற்படுத்திய பெரும் பாவத்திற்கு என்னை அழைத்துச் சென்று விடும்! ஒரு போதும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்என்று மறுமொழி பகர்ந்தார்கள்.                            

                                 ( நூல்: தஃப்ஸீர் அல் மஃபாதீஹுல் ஃகைப் )


وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا ()

மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால், இறைநம்பிக்கை கொண்டிருக்கிற எந்தவொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அந்த முடிவுக்கு மாறாக மாற்று முடிவை தேர்ந்தெடுக்கும் உரிமை, அதிகாரம் இல்லை. எவர் (அப்படி மாற்று முடிவை எடுத்து) அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறுசெய்கின்றாரோ, அவர் பகிரங்கமான வழிகேடாகத் திட்டமாக வழிகெட்டு விட்டார்”.                                        ( அல்குர்ஆன்: 33: 36 )

அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கைக் கொண்டிருக்கிற எந்தவொருக்கும் அல்லாஹ், ரசூலுடைய முடிவு விஷயத்தில் மாற்றுக்கருத்து கொள்ள எந்தவொரு அதிகாரமும் இல்லை எனும் போது, தலாக் சட்டமாகட்டும், ஹிஜாப் சட்டமாகட்டும், இதர இஸ்லாமிய விவகாரமாகட்டும் துளியும் சம்பந்தமில்லாத மாற்று கருத்தாளர்களிடம் சட்டக்கமிஷன் கருத்துக் கோரியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?....

1. 1980 களில் ஷாபானு வழக்கிற்கு எதிராக இந்தியாவின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து நடத்திய ஷரீஅத் பாதுகாப்பு பேரணி போன்று மாபெரும் பேரணி ஒன்றை நடத்த வேண்டும்.
ஏனெனில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வராமல் நீதிமன்றத்தை அணுகியதே இந்தப் பிரச்சனையை எதிர்த்து எப்படியும் முஸ்லிம் சமூகம் நீதிமன்றத்தை அணுகும்.

அப்படி நீதிமன்றத்தை அணுகினால் பாபர் மசூதி பிரச்சனை போன்று தலைமுறை தாண்டி, வழக்கை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வதோடு கொஞ்சம், கொஞ்சமாக பொதுசிவில் சட்டத்தை நடைமுறை படுத்தலாம் என்பது தான் அவர்களின் சூழ்ச்சி.

ஷாபானு வழக்கும்… ஒன்று திரண்ட முஸ்லிம் சமூகம்…

தமிழகத்தின் போராட்டம் திருநெல்வேலியை மையமாக வைத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரளா எம்.பி, பனாத்வாலா தலைமையில் எம்.ஓ.சி ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழகத்தின் மதுரை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி முதல் கேரளா பார்டர் வரை எங்கும் வாகனம் ஸ்தம்பித்து வழிநெடுக முஸ்லிம் சமூகத்தின் பெருந்திரள் கூட்டம்.

அன்றைய வாகனப்போக்குவரத்து குறைவான காலகட்டத்திலேயே அதிராம்பட்டிணத்திலிருந்து 500 வாகனங்களில் முஸ்லிம் சமூகம் கலந்து கொண்டது.

ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இசுலாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் நாடாளுமன்றத்த்தில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 கொண்டு வந்தார்.

இச்சட்டத்தின்படி தலாக் செய்யப்பட்ட பெண்னின் உறவினர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவ:ளுடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு கொண்டு வந்த முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டத்தால், கணவனால் திருமண முறிவு அடைந்த இசுலாமிய பெண்கள், மற்ற சமயத்தை சார்ந்த திருமண முறிவு ஆன பெண்கள் போன்று ஜீவனாம்சம் பெற முடியாது என்பதோடு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி முஸ்லிம் சமூகம் பயணிக்கத் தேவையில்லை என்பதும் நிரூபணமாகியது.

ஷாபானு வழக்கு சுருக்கமாக...

ஷா பானு சீவனாம்ச வழக்கு, ஷா பானு என்ற 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு துரத்திவிட்டார். 1978 ஆம் ஆண்டில். ஷா பானு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

தன்னுடைய கோரிக்கையில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் இசுலாமிய சரியத் சட்டப்படி தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாமிய சரியத் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் - இத்தா சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலமான மூன்று மாதம் சீவனாம்சம் வழங்கப்பட்டுவிட்ட்து.

மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் பணம் எனும் மணக்கொடையாக பெற்ற தொகையை தான் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டதால், ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரசூட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்தியர் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டில் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 ஆக உயர்த்தியது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை 23 ஏப்ரல் 1985 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை இந்திய மகளிர் அமைப்புகள் வரவேற்றது. ஆனால் ஒட்டு மொத்த இந்திய இசுலாமிய சமூகமும் அமைப்புகள் கடந்து கடுமையாக எதிர்த்தன.

இசுலாமிய சரியத் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இசுலாமிய சமூக அமைப்புகள் இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்து அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கிற உரிமையோடு வாழ வழிவகை செய்தது.

2. கருத்து முரண்பாடு ஏற்படுத்துபவர்களை அடையாளப் படுத்த வேண்டும்...

இது முஸ்லிம் சமூகம் விரைவாக செயல் படுத்த வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

சமீபத்தில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அனைத்து சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்ட போது, நயவஞ்சக நரிகள் (ததஜ வினர்) உள்ளிருந்து கொண்டு அது சரி தான் என்று கூறி அந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதற்கு ஆதரவு தெரிவித்தது.

அரசுக்கு இது ஆதரவாகப் போய் விட்டது. முஸ்லிம்களில் இந்த விவகாரத்தில் அவர்களுக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் உள்ளன என்று அரசு முஸ்லிம் சமூகத்தின் பெருவாரியான குரல்களை ஆதரிக்க முன்வரவில்லை.

அதே போன்று பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்கள் தங்களின் உடலை தானம் செய்வதாக மரணத்திற்கு முன்பாக ( முஸ்லிமாக மாறுவதற்கு முன்பாக ) எழுதி வைத்து விட்டு மரணித்த போது பெரும் பிரச்சனை எழுகிற போது உடல் தானம் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று என அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைக்கு உடன்பட்ட நிலைப்பாட்டை ஜாக் அமைப்பினர் உட்பட சில தவ்ஹீத் அமைப்பினர் எடுத்த போதிலும் இதே ததஜ வினர் கூடும் என்று வார இதழ்களுக்கு பேட்டியளித்தனர்.

அதற்கும் முன்பாக உத்திரபிரதேசத்தின் இம்ரானா விவகாரத்திலும் ததஜ வினர், மற்றும் இதர தவ்ஹீத அமைப்பினர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான முடிவுகளையே மேற்கொண்டு இஸ்லாத்தில் நிலையான சட்டங்கள் ஏதுமில்லையோ என்று ஆளும் அரசுகள் நினைக்கும் அளவிற்கு முரண்பாடான நிலைப்பாடினை எடுத்து இன்று இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், முத்தலாக் விவகாரத்திலும் கூட அவர்கள் முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாம் என்பது நமக்கு எந்தளவு தெரியுமோ அதே அளவு உளவுத்துறையின் மூலமாக மத்திய அரசும் அறிந்து வைத்திருக்கின்றது.

எனவே, தான் அரசியல் சாசனமும், அரசியலைப்புச்சட்டமும் வழங்கி இருக்கிற ஓர் உரிமையை பறிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. எப்படியும் இவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள் இப்படியே இருவேறு கருத்துக்களைக் கொண்டு அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள் அதற்குள் நாம் முடிந்த அளவு முயற்சிப்போம் என்று களம் இறங்கி இருக்கின்றார்கள்.

ஆகவே, ஷரீஅத் சட்டத்தை நிலை நாட்ட முயற்சி செய்வதோடு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் இவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.

3. அலட்சியப்போக்கை கை விட வேண்டும்....

இன்றைக்கு நாம் அலட்சியமாக இருந்து விட்டோம் என்றால் பாலினபாகுபாடு என்று கூறி பள்ளிவாசலுக்குள் பெண்களும் வரலாம் என சட்டமியற்றுவார்கள்.

பின்னர், ஆண்களைப் போன்று சாதாரணமான ஆடையணிந்தே தொழலாம். ஹிஜாப் எல்லாம் தேவையில்லை என்பார்கள். அதற்குப் பிறகு ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்பார்கள். ஏன் ஆண்கள் மட்டும் இமாமாக இருக்கின்றார்கள் பெண்களும் இமாமத் பொறுப்பிற்கு வரலாம் என்று கூட சட்டமியயற்றுவார்கள்.

இப்படியாக, அதென்ன ஆணுக்கு இரண்டு பாகம், பெண்ணுக்கு ஒரு பாகம் சொத்தில் சம பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு என்று கூறி சொத்துரிமைச் சட்டத்தில் கை வைப்பார்கள்.

இறுதியாக, இது எங்கு போய் முடியும், எங்கெல்லாம் கை வைக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை; அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும் மீண்டும் ஒரு ஸ்பெயின் உருவாக நாம் இடமளித்து விடக்கூடாது.
எல்லாம் வல்ல எங்கள் இறைவா! இந்தியாவில் முஸ்லிம் சமூகம் முஸ்லிம்களாகவே வாழும் நிலைமையை, உன் ஷரீஆவை மட்டுமே பின்பற்றி வாழும் நிலைமையை ஏற்படுத்தி அருள்வாயாக!

முஸ்லிம் சமூகத்தை ஒன்று படுத்தி, ஓரணியில் ஒன்று திரட்டி, நல்லதொரு தலைமையின் கீழ் அணி திரண்டு ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கை முற்றிலுமாய் துடைத்தெறிந்திடும் ஆற்றலை வழங்கிடுவாயாக!

        ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! பிளவுபட்டு கிடக்கும் நம் சமுதாயத்தை தங்களது-புள்ளிவிவரங்களுடன் விரிவாக எழுதியுள்ள இந்த ஆக்கம் ஒன்று படுத்தி பாசிச சக்திகளின் சூழ்ச்சிக்கு எதிராக எரிமலையாகஎழும். என்பதில் சந்தேகம் இல்லை. جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அழகிய தெளிவான பதிவு பாரகல்லாஹூ லகும்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அழகிய தெளிவான பதிவு பாரகல்லாஹூ லகும்

    ReplyDelete